மஸ்கெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா பகுதியின் தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்  மஸ்கெலியா தோட்டத்தை சேர்ந்த 52 வயது உடைய மூன்று குழந்தைகளின் தந்தையும் வெளிக்கள உதவி உத்தியோகத்தருமாகிய செமுவேல் வின்சென்ட் என அடையாளம்  காணப்பட்டுள்ளது.

மஸ்கெலிய பொலிஸாருக்கு கிடைப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸார் அந்த பகுதியை பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி விசாரணைகளை முன்னெடுத்தனர்.

மேலும், ஹட்டன் நீதிமன்ற நீதிவான் சடலத்தை பார்வையிட்ட பின்னர்,  சடலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஹட்டன் பொலிஸ் நிலைய கைரேகை நிபுணர்கள் வந்து ரேகைகள் பதிவு செய்ய உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply