வவுனியாவில் துப்பாக்கிச் சூடு ! சந்தேக நபர் இன்று கைது!

வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு பகுதியில்  நேற்று மாலை ஒருவர்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில்  39 வயதான சந்தேக நபர் ஒருவர்  இன்று காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அழகையா மகேஸ்வரன் என்பவரே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தோட்ட வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பக்கத்து தோட்டக்காரருடன் ஏற்பட்ட தகராரின் காரணமாகவே குறித்த கொலை இடம்பெற்றுள்ளதாக  ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம்  தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேக நபர் மீது ஏற்கனவே சுமார் 5  வழக்குகள் உள்ளதாகவும்  கடந்த வாரம் சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும்  20ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினமே தண்டப்பணத்தை செலுத்தி விட்டு பின்னர், மற்றொரு இடியன் துப்பாக்கியையும்  பெற்று அதன் மூலமே சூடு நடத்தியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply