ரணில் தலைமையில் பாரிய புதிய கூட்டணி – வெளியானது அறிவிப்பு!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் வத்தளை பிரதேசத்தின் புதிய அமைப்பாளராக ஹரின் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் வத்தளைக்கு ஹரின் பெர்னாண்டோவை நியமிக்க தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் அடுத்து பரந்த கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்ணியில், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளை ஒன்றிணைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply