வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை வடக்கு கிழக்கில் நீதிகோரி பூரண ஹர்த்தால் கடைப்பிடிப்பதற்கு வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எதிர்வரும் சனிக்கிழமை ஹர்த்தால் தினத்தன்று வட்டுவாகல் பாலத்தில் ஆரம்பித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை நோக்கி பேரணியொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த ஹர்த்தாலுக்கு அனைத்து தரப்பினரும் அரசியல் கட்சிகளும் எவ்வித பேதமுமின்றி ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹர்த்தால் இடம்பெறவுள்ள நாள் விடுமுறை என்பதால் வர்த்தகர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply