“போடா” என கடும் வார்த்தையால் கூறிய பிள்ளையான் – ஆவேசமான சாணக்கியன்!

மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் இன்றைய தினம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

மக்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுக் கொண்டிருந்த போது காணொளி ஒன்றை காட்சிப்படுத்த தமிழரசு கட்சி நாடாளமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அனுமதி கோரியுள்ளார்.

எனினும் அதற்கு அனுமதி வழங்க முடியாது என பிள்ளையான் தடுத்து நிறுத்தியிருந்தார். இதன் காரணமாக  நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் (பிள்ளையான்) இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது பிள்ளையான், சாணக்கியனை “போடா” என கூறியதையடுத்து,  ஆவேசமடைந்த சாணக்கியன் பிள்ளையானுடன் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply