கொழும்பில் பதற்றம் பொலிஸார் மற்றும் இராணுவம் குவிப்பு!

பேலியகொட மெனிக் சந்தை வியாபாரிகள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

பேலியகொட மெனிக் சந்தையில் அமைந்துள்ள கடைகளை வெளி மாவட்ட வியாபாரிகளுக்கு வழங்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் காலை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் வியாபார சம்மேளனத்தின் தலைவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெனிக் சந்தையில் ஆர்ப்பாட்டம் நடத்த தடைவிதித்து நேற்றைய தினம்  நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் இன்றைய தினமும் வியாபாரிகள் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதனையடுத்தே வியாபார சம்மேளனத்தின் தலைவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply