ரணில் தலைமையில் சர்வகட்சி மாநாடு இன்று!

தேசிய நல்லிணக்கம் தொடர்பிலாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கு அறிவிக்கும் வகையிலான சர்வகட்சி மாநாடு இன்று (26) மாலை 5.30 மணிக்கு கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த சர்வகட்சி மாநாட்டிற்கு பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக கட்சித் தலைவர்கள் பலரும் ஏற்கனவே ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவித்துள்ள நிலையில் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக அறியமுடிகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply