முல்லையில் முடங்குகிறது போக்கு வரத்து சேவை!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணர்களின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கும் பூரண கதவடைப்பிற்கும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை இடம்பெறவுள்ள கதவடைப்புப் போராட்டத்திற்கு, முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஆகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் கோரிக்கைக்கு அமைய நாளை முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு, பூரண ஆதரவு வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முல்லைத்தீவில் போக்குவரத்து சேவைகள் எவையும் இடம்பெறாது என முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply