கடுவெல பகுதியில் இளைஞன் கொலை –  மூவர் கைது 

கடுவெல லேக் வீதியில் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வைத்து 36, 46 மற்றும் 47 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, உயிரிழந்தவர் 29 வயதுடைய கொத்தடுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லேரியாவ பிரதேசத்தில் வைத்து கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு சடலம் முச்சக்கர வண்டியில் கடுவலைக்கு கொண்டு வரப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

நேற்று கடுவெல லேக் வீதிக்கு அருகில் உள்ள மரம் மூடிய பகுதியில் தாக்குதல் காயங்களுடன் உயிரிழந்தவரின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இறந்தவரின் உடல் அருகே இரண்டு தொலைபேசிகளையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply