பௌத்த ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் பறாளாய் ஆலயம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

சுழிபுரம் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

நாளை இடம்பெறவுள்ள இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யக்கோரி நாளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டம் நாளை பிற்பகல் 3 மணிக்கு சங்கானை பேருந்து நிலையம் முன்பாக இடம்பெறவுள்ளது.

“இந்த மண் எங்களின் சொந்த மண்” என்ற தொனிப்பொருளில் நாளை இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு மக்கள் அனைவரும் அணி திரண்டு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தமிழத்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply