மன்னாரில் கரையொதுங்கிய சடலம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண மன்னார் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட நபர்  சுமார் 30 தொடக்கம் 50 வயது மதிக்கத்தக்க 4.8 அடி உயரம் கொண்டவர்  எனவும்,   அந்நபர் கருப்பு நிற நீளக் கை சேட்,கருப்பு நிற அரைக்காற்சட்டை மற்றும் நீல நிற கட்டமிடப்பட்ட சாரம் அணிந்து காணப்பட்டிருந்தார் எனவும்  மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவர் அணிந்திருந்த  கருப்பு நிற  அரைக் காற்சட்டையில்   (SRI LANKA CRICKET ) என எழுதப்பட்டிருந்ததாகவும்,  அவரது சேட் பொக்கட்டில் 120 ரூபாய் பணம் காணப்பட்டதோடு,குறித்த பொக்கட் ஊசியினால்   குத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த சடலம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் அல்லது அடையாளம் காண விரும்புபவர்கள் மன்னார் பொலிஸ் நிலையம் அல்லது மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையுடன் தொடர்பை ஏற்படுத்துமாறு மன்னார் பொலிஸார் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply