ரயிலில் பயணித்த சீனப்பெண்ணை தாக்கிய மர்ம குழு!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி உடரட மெனிகே ரயிலில் பயணித்த சீன சுற்றுலாப் பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசியை திருட முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரயிலில் பயணித்த போது தனது தொலைபேசியில் வீடியோ எடுத்த சீனப் பெண் மீது ரயில் தண்டவாளத்திற்கு அருகில் இருந்த மூன்று இளைஞர்கள் அவரது கையடக்க தொலைபேசியை திருடுவதற்காக தடியால் தாக்கியுள்ளனர்.

நாவலப்பிட்டி, இங்குருஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் நடைபெற்ற இந்த சம்பவம் சீன பெண்ணின் தொலைபேசியில் பதிவாகியுள்ளதுடன் அவரது கையிலும் காயம் ஏற்பட்டுள்ளது.

லியு குயின் என்ற சீனப் பெண், தனது கணவர் மற்றும் மகளுடன் இலங்கைக்கு விஜயம் செய்து, வீதி வழிகாட்டி ஒருவருடன் எல்ல ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.

எவ்வாறாயினும், நாவலப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் இரண்டு சந்தேகநபர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply