மட்டக்களப்பில் பிக்குவின் அடாவடி – தடுத்து வைக்கப்பட்ட மதத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள்!

மட்டக்களப்பில் பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரால் ஊடகவியலாளர்கள் மற்றும் சர்வ மத தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பௌத்த மதகுரு தலைமையிலான குழுவினர் மட்டக்களப்பில் காணி அபகரிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காக இன்றைய தினம் சர்வ மதத் தலைவர்களும் ஊடகவியலாளர்களும் களவிஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்திருந்தனர்.

அதனையடுத்து, திரும்பிச் செல்லும்போதே அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை அபகரிப்பவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இணைந்து அனைவரையும் வழியில் மறித்து தடுத்து வைத்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply