யாழில் திடீர் சுகயீனமடைந்த இளைஞன் உயிரிழப்பு – வெளியான பின்னணி!

அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட  வைத்திய பரிசோதனையில் இளைஞன் கிருமி தொற்றுக்கு உள்ளாகி இருப்பதும், போதைக்கு அடிமையானவர் என்பதனையும் வைத்தியர்கள் கண்டறிந்தனர்.
இளைஞனுக்கான சிகிச்சையை வழங்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
அதேவேளை மற்றுமொரு இளைஞனும் போதைக்கு அடிமையான நிலையில் , கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply