யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – வைத்தியசாலை முன் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று இடம்பெற்று வருகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியது.
குறித்த சம்பத்துடன் தொடர்புடைய தாதியை பணி நீக்கம் செய், வைத்தியசாலை பணிப்பாளரே விசாரணைகளை மூடி மறைக்காதே உள்ளிட்ட கோஷங்கள் இதன்போது எழுப்பபட்டது.
ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மகஜர் கையளிப்பதற்கு பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்று வருகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply