பயணப் பையிலிருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் வெளியான தகவல்கள்!

சீதுவ, தண்டுகம் ஓயாவின் கரையில் நேற்றிரவு பயணப் பைக்குள் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பிலான மேலதிக தகவல்கள் பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாகவும், சடலம் நீல நிற பயணப் பையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை, அவர் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் 5’8” உயரம் கொண்ட ஒரு ஆண், சிவப்பு நிற சட்டை மற்றும் பழுப்பு நிற கால்சட்டை அணிந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் கழுத்தின் வலது பக்கத்தில் 07 நட்சத்திரக் குறிகள் கொண்ட பச்சை குத்தப்பட்டிருப்பதாகவும், அவரது தலை மற்றும் தாடியின் இரு பக்கங்களிலும் காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணைகளை அடுத்து சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply