கஜேந்திரன் தாக்கப்பட்டமையின் பின்னணியில் பெரும்பான்மை தலைவர்கள்!

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, இனங்களுக்கு இடையில் ஒற்றுமை நிலவ வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தழிழ் சிங்கள மக்களிடையே இன கலவரத்தை உருவாக்கி அதன் மூலம் தேர்தலில் வெற்றியைப் பெறும் நோக்கத்தை கொண்ட பெரும்பான்மை தலைவர்களின் பின்னணியிலேயே இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டால் மாத்திரமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்னண் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply