யாழில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பகிரங்க அழைப்பு!

யாழ்ப்பாணம் தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஒவ்வொரு பௌர்ணமி தினங்களிலும் நடைபெறும் இந்த போராட்டம் இன்றும் மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி நாளை மாலை 6 மணிக்கு நிறைவு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த போராட்டத்தில் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply