அடித்துக் கொலை செய்யப்பட்ட வயோதிபர்!

மினுவாங்கொடை அளுதேபொல பிரதேசத்தில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இறந்தவரின் மகள் முதல் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து வேறு ஒருவருடன் வாழ்ந்து வரும் நிலையில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டிருந்தது.

இதில் தந்தை தலையிட்ட போது குறித்த நபர், பொல்லால் அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 74 வயதுடைய நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply