விபத்தில் பத்து வயது சிறுமி பலி!

அனுராதபுரம் தலாவ மத்தி பகுதியில் எரிபொருள் தாங்கியொன்று உந்துருளியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் தலாவ ஆரம்ப பாடசாலையில் தரம் ஐந்தில் கல்வி கற்கும் 10 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.
கொழும்பு சப்புகஸ்கந்த பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த எரிபொருள் தாங்கி ஒன்றே உந்துருளியில் மோதுண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சிறுமியின் தாய்க்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்ற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply