கொழும்பு புறநகரில் திடீரென பற்றியெரிந்த தீ!

கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

இன்று காலை இரண்டு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த கட்டிடம் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை நிலையமாக இயங்கிவந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாரியளவில் விளையாட்டுப் பொருட்கள் எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply