தீர்வு இல்லையேல் நடவடிக்கை தீவிரமடையும் – அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையக் கட்டிடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட 48 மணித்தியாலவேலை நிறுத்தப் போராட்டம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.

அதே வேளை தமது பிரச்சினைக்கு உரிய தீர்வினை அதிகாரிகள் வழங்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தவுள்ளதாகவும் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply