தெளிவான நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும்..! ரணிலிடம் தமிழ் அரசு கட்சி வலியுறுத்தல்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் தெளிவான நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பு தொடர்பில், கிளிநொச்சியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.

இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற சந்திப்பின்போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முக்கியமான செய்தி ஒன்றை ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்ததாகவும் சிறிதரன் இதன்போது குறிப்பிட்டார்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply