ஜனாதிபதி தலைமையில் ஆளுங்கட்சி கூட்டம் – மகிந்த, பசில் பங்கேற்க தீர்மானம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், இன்று இடம்பெறவுள்ள ஆளுங்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டோர் பங்கேற்க தீர்மானித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் சமகால அரசியல் நிலைவரம், உட்பட, ஆளுந்தரப்பு அரசியலில் இடம்பெறும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளது.

எவ்வாறாயினும், இக் கூட்டத்தை புறணிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்பு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply