கொழும்பில் தமிழ் மாணவி சடலமாக மீட்பு

கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொரளையில் வசித்து வரும் 17 வயதுடைய சண்முகம் வளர்மதி என்ற மாணவியே இன்று அதிகாலை அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் நடைபெற்ற G.C.E O/L பரீட்சையில் தோற்றியிருந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாணவியின் மரணத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிஸார் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply