மன்னார் கடற் பகுதியில் ஒதுங்கிய பாரிய கப்பல்!

மன்னார் கடற்பகுதியில் கப்பல் ஒன்று அநாமதேயமாக கரையொதுங்கியுள்ளது.

இந்தக் கப்பல் நேற்று மாலை வேளை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில்  கரைதட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.

குறித்த கப்பலை இலங்கை கடற்படையின்ர் பரிசோதனை செய்த போது இந்தியாவிற்குச் சொந்தமானது என தெரிவித்துள்ளனர்.

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த கப்பல் கடல் பகுதியில் காணப்படும் மணல்களை அகழ்வதற்காக பயன்படுத்தப்படும் கப்பலின் தோற்றத்தை ஒத்ததாக காணப்படுகின்றது

கப்பலில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக கப்பல் தரை தட்டியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

இவ்வாறு தரை தட்டிய கப்பலை பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply