கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண் தொடர்பான விபரம் வெளியானது

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்க்கப்பட்ட வயோதிபப் பெண், திம்புல-பத்தனை தோட்டத்தில் வசிப்பவர் எனவும், அவர் 67 வயதுடைய பெருமாள் பெரமாய் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதோடு, கடந்த 2015 முதல் குறித்த நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவர், திருமணம் முடித்தவர் எனவும், பிள்ளைகள் இல்லை எனவும்,  கணவரும் உயிருடன் இல்லை எனவும் தெரிவிக்கப்படுவதோடு, தங்கையின் மகனின் அரவணைப்பில் வசித்து வந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கடந்த 9 ஆம் திகதி வீட்டைவிட்டு சென்றுள்ள நிலையில் நேற்றுக் காலை 10.30 மணியலவில் தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் நீதவானின் உத்தரவுக்கு அமைய சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதணைக்காக வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தலவாக்கலை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், அவரின் உறவினர்கள் அங்கு வந்து  உடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply