வாக்குமூலம் கொடுக்கச் சென்ற வயோதிபப் பெண் உயிரிழப்பு

இளைஞன் ஒருவரின் தற்கொலை தொடர்பாக வாக்குமூலம் அளிக்கச் சென்ற வயோதிப பெண்ணொருவர் பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் 4 ஆம் குறுக்குத்தெரு பகுதியில் வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த மல்லாவி துணுக்காய் பகுதியை சேர்ந்த ஜே.தேவரஞ்சன் என்னும் 31 வயதுடைய ஆண் ஒருவர், கடந்த 12 ஆம் திகதி இரவு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணப் பொலிஸார், இளைஞன் தங்கியிருந்த வீட்டின் மற்றுமொரு அறையில் தங்கியிருந்த வயோதிப பெண்னை வாக்குமூலம் வழங்க வருமாறு நேற்றைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்திருந்தனர்.

அதன்படி, வாக்குமூலம் அளிப்பதற்காக பொலிஸ் நிலையம் சென்றிருந்த குறித்த பெண், திடீர் சுகவீனமுற்று பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து இறந்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply