மருந்துகளால் தொடர் உயிரிழப்புக்கள் – கோட்டாபயவின் பதவிப்பிரமாண நாள் முதல் தீட்டப்பட்ட சதி!

தரமற்ற மருந்துகளால் நாட்டில் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்களின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் போராட்டங்கள் ஊடாக, நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும் சதித்திட்டமே மேற்கொள்ளப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக அநுராதபுரத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட நாளில் இருந்து, இந்த சதிக்கான திட்டம் தீட்டப்பட்டது.

இதன் விளைவாக அரசாங்கத்தை கவிழ்த்து, ஜனாதிபதியையும் அவர்கள் விட்டியடித்தார்கள்.

எரிபொருள் இல்லாமல் பல நாட்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

12 மணித்தியாலங்களுக்கும் மேல் மின்வெட்டு நீடித்தது.  எரிவாயு சிலிண்டர்கள் வெடித்தன.

இவ்வாறு பல பிரச்சினைகள் அன்று இருந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்து ஒரு வாரத்திற்குள்ளேயே, நாட்டில் வரிசை யுகம் இல்லாது போனது.

மின்வெட்டும் இல்லாது போனது. எரிவாயு சிலிண்டரும் எங்கும் வெடிக்கவில்லை.

ஒரு டொலர் கூட வராமல் எப்படி இது சாத்தியமாகும்? இப்போதும் இதேபோன்றதொரு சதித்திட்டம் தான் நாட்டில் அறங்கேறி வருகிறது.

மருந்துகள் விஷமடைவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு சதித்திட்டமாகும். இந்த விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் தேடிப் பார்க்க வேண்டும்.

இந்த நாட்டை இல்லாதொழிக்கும் ஒரு குழுவினர், அரச சேவையிலும் உள்ளார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply