காணாமல் ஆக்கியவர்களே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் துர்ப்பாக்கியம்!

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும், எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது.

அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான ஆதரவு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச கண்காணிப்பாளர்களின் விசாரணை வேண்டும் என்பதே எங்களுடைய தொடர்ச்சியான வலியுறுத்தல் என அவர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையிலேயே தங்களுடைய தொடர்ச்சியான கோரிக்கை அமைகிறது என சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கை என்பது நியாயமான ஒரு கோரிக்கையாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இங்கு கொலை செய்தவர்களே விசாரணை செய்வதும் தீர்ப்பளிப்பதுமான ஒரு நாடாக இலங்கை இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

யார் கொன்றார்களோ, யார் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தினார்களோ அவர்களே அதனை விசாரிப்பதும், அதற்குரிய தீர்ப்பு வழங்குவதற்கான ஒரு நாடாக இலங்கை இருக்கின்றது என விசனம் வெளியிட்டுள்ளார்.

மனிதப் படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதை விசாரிக்கின்றவர்கள் கூட அவர்களை காணாமல் ஆக்கியவர்கள் தான் எனத் தெரிவித்துள்ளார்.

எனவே சர்வதேச விசாரணை என்பது தொடர்ச்சியான கோரிக்கை. அது கட்சிக்கு அப்பால் வடக்கு கிழக்கிற்கு அப்பால் அனைத்து தமிழ் கட்சிகளின் கோரிக்கை யாகவும் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான ஆதரவு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply