கெபிட்டிகொலாவவில் முதியவர் படுகொலை – விசாரணைகள் ஆரம்பம்

அனுராதபுரம் கெபிட்டிகொலாவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கெபிட்டிகொலாவ, கல்வெவ பிரதேசத்தில் 64 வயதுடைய நபர் ஒருவர் மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர், கெபிட்டிகொலாவ, கட்டுவலகலேவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதோடு, அவர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள நெல் ஆலையில் வைத்து இருவரால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் சந்தேகநபர்களுக்கு சொந்தமானதாக கூறப்படும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கெபிட்டிகொலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply