வவுனியா தோணிக்கல் வாள்வெட்டு விவகாரம் – தற்போது வெளியாகியுள்ள தகவல்!

வவுனியா – தோணிக்கல்லில் வீட்டிற்குத் தீ வைத்ததோடு, வீட்டிலிருந்தவர்கள் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு இன்றைய தினம் கைது செய்யப்பட்டவர், வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சுகந்தனின் நண்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வவுனியா தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை நேற்று முன்தினம் கைது செய்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் அடிப்படையில் கூமாங்குளத்தைச் சேர்ந்தவரும் வாள்வெட்டுத் தாக்குதலையடுத்து, உயிரிழந்த சுகந்தனின் நண்பராக இருந்து  பின்னர் பிரிந்து சென்றவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் விசாரணைக்குட்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் 24 மணி நேரம் வவுனியா தலைமை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ள வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சுபாசினி தேவராசா நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply