சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை மொனராகலை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சகோதரிகள் 12 மற்றும் 10 வயதுடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 57 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரகெட்டிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் கள அதிகாரியாக கடமையாற்றும் நபர் ஒருவரே சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவராவார்.

அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர், மதுருகெட்டிய பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் சில காலமாக தங்கி வேலை செய்துவந்துள்ளார்.

இரண்டு சிறுமிகளின் தாயும் தந்தையும் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்ப்பதாகவும், அவர்கள் வீட்டில் இருந்து வெளியே சென்ற போது சந்தேகநபரால் இரண்டு சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply