சாணக்கியனின் ஊழலை அம்பலப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ள ஈ.பி.டி.பி!

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  தாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா எச்சரிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டுள்ளார்.

இன்று மட்டக்களப்பில் உள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

சாணக்கியன் தனது வேட்டியை ஒவ்வொரு இடமாக வீசி தற்போது சூறை முள்பற்றையில் வீசியுள்ளதாகவும் அதன் தாக்கம் இனி அவருக்கு தெரியவரும் எனவும் தெரிவித்தார்.

போராட்டத்தைப் பற்றியும் அதன் வலி பற்றியும் தெரியாத அவருக்கு  தமது கட்சியை விமர்சிப்பதற்கு எந்த அருகதையும் இல்லையெனவும் அமைப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply