ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து! குழந்தை பலி!

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் கப் வண்டியொன்று பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர்.

சாமிமலை 3ஆம் மைல் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கப் வண்டி 30 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த,  வாகனத்தின் சாரதி உள்ளிட்ட  12 பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள்  டிக்கோயா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, ஈச்சங்குளம் – வவுனியா வீதியின் புதுக்குளம் பகுதியில்  மோட்டார்  சைக்கிலொன்றும்  லொறியும் மோதியதில்  9 வயது குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply