முச்சக்கர வண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் இல்லை!

அரசாங்கத்தின் மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்தின் பிரகாரம் முச்சக்கர வண்டிக் கட்டணத்தில் திருத்தம் ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம்…

வவுனியா சிறைச்சாலைக்கு தற்காலிகமாக பூட்டு

வவுனியா சிறைச்சாலைக்குள் அம்மை நோய் பரவி வருவதால் இரண்டு வார காலத்திற்கு சிறைச்சாலை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, சிறைச்சாலைக்கு பார்வையாளர்கள் நுழைவது இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கைதிகளை சட்ட…

விமான சேவைகள் தொடர்பாக வழங்கப்பட்ட அங்கீகாரம்!

இந்தியாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தோனேசியாவின் ஜகார்த்தா சர்வதேச விமான நிலையங்களில் ஸ்ரீலங்கன் விமான நிறுவன விமானங்களுக்கான சேவைகளைப் பெற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது….

வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட நோயாளி!

களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த நோயாளி ஒருவர் இன்று காலை அருகில் இருந்த வடிகானில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த…

சிறுத்தை குட்டிகளின் இருப்பிடத்தில் தலையிடவோ மாற்றவோ கூடாது – வனவிலங்கு துறை

மத்திய மலையகத்தின் புதர் காடுகளில் காணப்படும் சிறுத்தை குட்டிகளின் இருப்பிடத்தில் தலையிடவோ அல்லது அவற்றின் இருப்பிடங்களை மாற்றவோ வேண்டாம் என வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது….

சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை திரும்பப் பெறக்கூடாது என்பதில் சுகாதாரத்துறை செயலாளர் உறுதி – ஜனக ஸ்ரீ சந்திரகுப்த

ஊடகங்களுக்கு தகவல்களை வெளியிட வேண்டாம் என அரச ஊழியர்களுக்கு அறிவுறுத்தி வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எக்காரணம் கொண்டும் மீளப்பெறப்பட மாட்டாது என சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ…

மின்சாரத்தை துண்டிக்க சென்ற நபர்களை தாக்கிவிட்டு தப்பி சென்ற வீட்டு உரிமையாளர்!

மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார ஊழியர்கள் மூவர் வீட்டு உரிமையாளரால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசத்தை…

பிரான்ஸ் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை கேலிக்குள்ளாக்கி சவால்விடுத்துள்ள கம்மன்பில!

விமானத்திற்கு எரிபொருளை நிரப்பவே பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்ததாகவும் எனினும் பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் 75 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு வந்துள்ளார்…

அக்கரைப்பற்றில் விழுமியம் சஞ்சிகை வெளியீடு

ஹல்லாஜ் தகவல் வள நிலைய கேட்போர் கூடத்தில்  விழுமியம் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு கடந்த சனிக்கிழமை அஷ்ஷேக்.ஏ.ஜீ.ஏ.றவூப் தலைமையில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக…

திருகோணமலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு தீக்கிரை!

திருகோணமலை மாவட்டத்தின் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலங்கை துறைமுகத்துவாரம் பகுதியில் மீன்பிடி படகொன்று இனம் தெரியாத நபர்களால் தீயிட்டு கொளுத்தப்பட்டு முழுமையாக சேதமடைந்துள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்….