குழு மோதலில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட நபர்!

கொழும்பில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் ஒருவர் கலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மட்டக்குளி ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்ஜ் பீரிஸ் மாவத்தையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மட்டக்குளிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது வெட்டுக்காயங்களுடன் வீதியில் வீழ்ந்துகிடந்த வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதன் பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மோதலில் ஈடுபட்ட 28 வயதுடைய மற்றுமொரு இளைஞர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply